Monday, January 6, 2014

பொன்னி நதி பாயும் - இது
எங்களோட ஊரு

மூணெழுத்து ஊரு - நம்ம
முசிரியின்னு பாடு

நெல்லு விதைச்சாலே - அது
பொன்னாய் மாறும் பூமி

துள்ளித்திரிந்தாலே - மனம்
லேசாய் போகும் வா நீ

.......................................................................................................

மலையிருக்கு  மயிலிருக்கு
பூவிருக்கு புகழிருக்கு
தேனிருக்க தென்றலிருக்கு
ஈகையிருக்கு இறையிருக்கு

ஊரு விட்டு ஊரு வந்தா
யாரும் விட்டு போகார்

நாட்டின் நாடு ஊருன்னுதான்
பாட்டெடுத்து பாடு

.........................................................................................................

லேபிருக்கு கிரௌண்டிருக்கு
குளிரிருக்கு குளமிருக்கு
டிஜிபோர்டிருக்கு ரோபோயிருக்கு
கின்னசிருக்கு விளையாட்டிருக்கு

கல்வித்தந்தை ராமமூர்த்தி
கண்டதிந்த கனவு

நன்றி கடன் செலுத்துகின்றோம்
செல்லம்மா பள்ளிக்குத்தானே 

No comments:

Post a Comment